காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்…
எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால் என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்… ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்….
எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான்.2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை.எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது.
ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை.காணவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானிற்கு ஆயுத பயிற்சி எடுக்க சென்று விட்டதாக சொல்லலாம்.அது குறித்து விசாரிக்க இவன் கொண்டு வரபட்டிருந்தான்.
