உலகத் தமிழ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு, வணக்கம் !
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 38 ஆவது தமிழ் விழா ராலே, வட கரொலைனாவில் நடைபெறவுள்ளது. அங்கு உலகத் தமிழ் அமைப்பு (WTO) ஒருங்கிணைக்கும் இணையமவர்வு “தமிழரின் உரிமையும் விடுதலையும்” எனும் தலைப்பில் சூலை 04, 2025, வெள்ளிக்கிழமை, மாலை 03:00 மணிக்கு, அறை எண் 201 இல் நடைபெறும்.

இக்கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் , தமிழிய ஆய்வாளர் தக்கார் ம.சோ. விக்டர், வரலாற்று ஆய்வாளர் திரு. இரா. மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
உலகத் தமிழ் அமைப்பு
World Thamil Organization, Inc.
105 Ronaldsby Drive, Cary, North Carolina 27511, USA
(A Non-Profit Organization Registered in USA)
wtogroup@gmail.com | www.WorldThamil.org | @WorldThamilOrg